வணக்கம்!!

வாசித்தலும் எழுதுதலும் மறைந்துகொண்டே வருகிறது. அதற்குக் காரணம் மனிதர்களுக்குப் பொறுமை இல்லாமல் போய்விட்டது என்றே சொல்லலாம். சமூக வலைத்தளங்களில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான ஒளிக்காட்சிகளைப் பார்க்கவே அனைவரும் விரும்புகிறோம். ஏதோ ஒரு ஒளிக்காட்சி ஒரு நிமிடத்திற்கு மேல் சென்றால் அதைக் கேட்கக்கூட நமக்குப் பொறுமை இருப்பதில்லை. அப்படியே மேலே தள்ளிவிட்டு அடுத்த ஒளிக்காட்சிக்குத் தாவுகின்றோம். நமக்கு ஏன் இந்த வேகம்? எங்கேதான் செல்கிறோம்? நேரத்தையும் கேட்கப்போகும் தகவல்களின் பயனையும் நாம் எப்படி தொடர்புபடுத்துகிறோம் என்று நினைத்துப்பார்க்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது.
நானே அப்படிச் செய்திருக்கிறேன். ஒரு பெண் தன் கதையை மிக வேதனையோடு சொல்ல தொடங்குகிறார், அவரைப் பார்க்கிறேன் அவர் கண்ணீர்த்துளிகளில் நான் நனைந்தும் போகிறேன், ஆனால் முழுமையாக அவளுடைய கதையைக் கேட்க என் மனம் (விரல்) இடம் கொடுப்பதில்லை. ஏன் இவள் இப்படி வழவழ கொழகொழவென்று பேசுகிறாள்? சொல்ல வந்ததைச் சுருக்கமாகத்தான் சொன்னால் என்ன என்ற வினா எழுகிறது. அதே சமயத்தில் எரிச்சலும் தோன்றுகிறது.
ஏன் அப்படித் தோன்றுகிறது என்று நான் ஒருபோதும் நினைத்துப்பார்த்தது கிடையாது. அவளுடைய கதை இல்லையென்றால் மற்றொருவருடைய கதை என்று ஒளிக்காட்சிகளை மேலே தள்ள எண்ணலடங்கா கதைகள் நம் கண்முன் விரிகின்றன.
நிறைய கதைகள் இருப்பதால் இந்த அலட்சிப் போக்கா? அல்லது உண்மையிலேயே நமக்கு நேரம்தான் இல்லையா? அல்லது கல்நெஞ்சங்களாக மாறிக்கொண்டு இருக்கிறோமா?
சொல்லுங்களேன் படித்துப் பார்ப்போம்!!

Leave a comment